தீந்தமிழ் வளர்த்த திருமறை காவலர்கள்
₹0.00
இந்த புத்தகத்தை எழுதியவர் ஞானபிரகாசம். இவர் கத்தோலிக்க ஆயராக பணிபுரிந்தார். வரலாற்றை இலக்கிய நயம் கலந்து சொல்வதில் வல்லவர். அவரின் தமிழ் சுவைக்கு இந்த புத்தகம் ஒரு விளம்பல்
Description
சங்க காலம் முதல் தமிழை வளர்த்த பெரியாருள் மறைக்காவலர் முக்கிய இடம் பெறுகின்றனர். கவிஞர் குறிப்பிட்டவாறு,
குன்றம் வதித்து குணாகடலைத் தான் குடித்தே அன்று தமிழ் தந்த அகத்தியனே ஆதிமுனி பாவடிகள் தேன்வடியப் பாடுசிலம்பின் இளங் கோவடிகள் ஓர் முனியே! கோவேந்தன் சீவகன்தன் சிந்தாமணிதந்த திருத்தக்கர் ஓர் முனியே செந்தமிழின் அகராதி செய்த முதற் தந்தை தேம்பாவணி தந்தோன் செயல்வீர மாமுனியே, ஒப்பிலக்கணம் ஒன்றைச் செப்பிவைத்த கால்ட்வெல்ட்
திப்பியபோப் பையரெல்லாஞ் சிறந்த மறைமுனிவர்… எனும் கவிதை வரிகளில் இது நன்கு புலப்படுகின்றது. அந்தவகையில் நாம் ஈழமணித் திருநாட்டிலும் தமிழை வளர்த்த எம் மறைக்காவலருள் 1. சுவாமி ஞானப்பிரகாசியார் 2. தவத்திரு தனிநாயக அடிகள் 3. தாவீது அடிகள் என்போர் முக்கிய இடம் பெறுகின்றனர்.
Reviews
There are no reviews yet.