பெர்சிவெல் மற்றும் அவரது குழுவினர் இணைந்து செய்த மொழிபெயர்ப்பினை ஏற்றுகொள்ளாத வேதாகம சங்கத்தினர் மறுபடியுமாக ஒரு குழு அமைத்து வேதாகமத்தை மொழிபெயர்க்க திட்டமிட்டனர். அச்சமயம் வெளிநாட்டு மிஷனெரி சங்கங்கள் தமிழகத்தை ஆக்கிரமித்திருந்தது. எனவே மிஷனெரிகளைக் கொண்டு அப்பணியை நிறைவேற்ற திட்டமிட்டனர். அப்பொழுது பணிசெய்துகொண்டிருந்த மிஷனெரிகள் 95 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. எனினும் 28 பேர் மாத்திரம் பதில் அளித்தார்கள். சிலர் ஆலோசனைகளை வழங்கினார்கள். அவர்களுள் அருள்திரு, ஜியார்ஜ் பெற்றிட் ஐயரவர்கள் வழங்கிய ஆலோசனை ஏற்றுகொள்ளப்பட்டது. அவர்கள் வழங்கிய ஆலோசனை என்னவெனில் பப்ரீஸியஸ் அவர்கள் மொழிபெயர்ப்பினை மறுபடியுமாக…
தமிழகத்தைப் போன்று யாழ்ப்பாணத்திலும் வேதாகம மொழிப்பெயர்ப்பு வேகமெடுக்க ஆரம்பித்தது. பல்தேயுஸ் என்பவர் முதலில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார் ஆனால் சரிவர முடிக்க இயலவில்லை. பல்தேயுஸைத் தொடர்ந்து அட்ரியானஸ் டிமோ என்ற டச்சு குருவானவர் 1692ம் ஆண்டு புதிய ஏற்பாட்டினை மொழிபெயர்த்தார். ஆயினும் அம்மொழிபெயர்ப்பு அச்சாகவில்லை. யாழ்ப்பாணத்தில் வேதாகம மொழிபெயர்புக்கு இருந்த ஆர்வம் குறையவில்லை. டி மொலொ என்ற வேத பண்டிதர் இந்த பணிக்கென நியமிக்கப்பட்டார். பல மொழிகளைக் கற்றறிந்த இவர் "மெலொ பீ என்றழைக்கப்பட்டார். இவர் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து 1759ம் ஆண்டு இவரது மொழிபெயர்ப்பு…