பெர்சிவெல் மற்றும் அவரது குழுவினர் இணைந்து செய்த மொழிபெயர்ப்பினை ஏற்றுகொள்ளாத வேதாகம சங்கத்தினர் மறுபடியுமாக ஒரு குழு அமைத்து வேதாகமத்தை மொழிபெயர்க்க திட்டமிட்டனர். அச்சமயம் வெளிநாட்டு மிஷனெரி சங்கங்கள் தமிழகத்தை ஆக்கிரமித்திருந்தது. எனவே மிஷனெரிகளைக் கொண்டு அப்பணியை நிறைவேற்ற திட்டமிட்டனர். அப்பொழுது பணிசெய்துகொண்டிருந்த மிஷனெரிகள் 95 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. எனினும் 28 பேர் மாத்திரம் பதில் அளித்தார்கள். சிலர் ஆலோசனைகளை வழங்கினார்கள். அவர்களுள் அருள்திரு, ஜியார்ஜ் பெற்றிட் ஐயரவர்கள் வழங்கிய ஆலோசனை ஏற்றுகொள்ளப்பட்டது. அவர்கள் வழங்கிய ஆலோசனை என்னவெனில் பப்ரீஸியஸ் அவர்கள் மொழிபெயர்ப்பினை மறுபடியுமாக…
தமிழகத்தைப் போன்று யாழ்ப்பாணத்திலும் வேதாகம மொழிப்பெயர்ப்பு வேகமெடுக்க ஆரம்பித்தது. பல்தேயுஸ் என்பவர் முதலில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார் ஆனால் சரிவர முடிக்க இயலவில்லை. பல்தேயுஸைத் தொடர்ந்து அட்ரியானஸ் டிமோ என்ற டச்சு குருவானவர் 1692ம் ஆண்டு புதிய ஏற்பாட்டினை மொழிபெயர்த்தார். ஆயினும் அம்மொழிபெயர்ப்பு அச்சாகவில்லை. யாழ்ப்பாணத்தில் வேதாகம மொழிபெயர்புக்கு இருந்த ஆர்வம் குறையவில்லை. டி மொலொ என்ற வேத பண்டிதர் இந்த பணிக்கென நியமிக்கப்பட்டார். பல மொழிகளைக் கற்றறிந்த இவர் "மெலொ பீ என்றழைக்கப்பட்டார். இவர் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து 1759ம் ஆண்டு இவரது மொழிபெயர்ப்பு…
₹50.00Original price was: ₹50.00.₹0.00Current price is: ₹0.00.
Rated 0 out of 5
ரட்சணிய யாத்திரிகம் என்றி ஆல்பிரட் கிருட்ணபிள்ளை (எச்.ஏ.கிருட்டினனார்) அவர்களால் எழுதப்பட்ட ஒரு காப்பிய நூல் ஆகும். ஜாண் பான்யன் (John Bauyan) என்பவர் ஆங்கிலத்தில் இயற்றிய 'புனிதப் பயணிகள் முன்னேற்றம்' என்ற நூலின் தமிழாக்கமான மோட்சப்பிரயாணம் என்னும் நூலைத் தழுவி செய்யுள் நடையில் எழுதப்பட்டதாகும்.(The Pilgrim's Progress) தழுவல் ஆகும். கம்ப இராமாயண இலக்கிய வழியிலும், தண்டியலங்கார இலக்கண வழியிலும் தமிழ் மரபுக்கேற்ப எழுதப்பட்டுள்ளது.
₹100.00Original price was: ₹100.00.₹0.00Current price is: ₹0.00.
Rated 0 out of 5
இந்த புத்தகத்தின் ஆசிரியர் ரா.பி.சேதுபிள்ளை என்பவராவார். இவர் ஒரு தமிழ் அறிஞர்,எழுத்தாளார்,வழக்கறிஞர்,மேடைபேச்சாளர்.இவர் தமிழில் சொற்பொழிவு,உரைநடை எழுதுவதிலும் மிகவும் புகழ் பெற்றவர்.இனிய உரைச்செய்யுள் எனப்படும் புதிய உரைநடையை தனித்தே கொண்டதால் அவரது உரைநடையை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டி உள்ளனர். அவரது உரைநடையில் செய்யுள்களுக்கே உரிய எதுகை,மோனை,என்பனவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே முதன்மையானவர்.
₹100.00Original price was: ₹100.00.₹0.00Current price is: ₹0.00.
Rated 0 out of 5
இந்த புத்தகத்தை எழுதியவர் ஜேகதீச ஐயர் அவர்கள். திருநெல்வேலி ஜில்லாவின் புற அமைப்பு மற்றும் மக்கள் கண்ணோட்டத்தை சிறந்த முறையில் இந்த புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். காலம் : 1925
₹50.00Original price was: ₹50.00.₹0.00Current price is: ₹0.00.
Rated 0 out of 5
இந்த நூலை எழுத்தியவர் இரத்தினராஜா என்பவராவார். தமிழை வளர்த்தவர்கள் சைவர் மட்டுமே எனக் கூறப்படும் தப்பான கொள்கைக்கு எவ்வித ஆதாரமுமில்லை என்பதை விளக்க இச்சிறு நூல் பயன்படும் என நம்புகிறோம். மேலும் கிறிஸ்தவ மிசனரிகளின் தமிழ் தொண்டையும் காணலாம்
₹50.00Original price was: ₹50.00.₹0.00Current price is: ₹0.00.
Rated 0 out of 5
இந்த புத்தகத்தை எழுதியவர் ஞானபிரகாசம். இவர் கத்தோலிக்க ஆயராக பணிபுரிந்தார். வரலாற்றை இலக்கிய நயம் கலந்து சொல்வதில் வல்லவர். அவரின் தமிழ் சுவைக்கு இந்த புத்தகம் ஒரு விளம்பல்
₹10.00Original price was: ₹10.00.₹0.00Current price is: ₹0.00.
Rated 0 out of 5
கிறிஸ்தவத்தில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. அதில் மிகமுக்கியமான ஒன்று கிறிஸ்து இயேசுவின் நற்கருணை பந்தி. அதனை நாம் எவ்வாறு ஆசரிக்கவேண்டும் என்று பலர் பல விதமாக கூறியிருந்தாலும், நம் இடத்தில் கிறிஸ்துவின் பணியை சிறப்பாக செய்த பேராயர். இராபர்ட் கால்டுவெல் ஐயர் கூறியுள்ள விதம் சிறிது வித்தியாசமானது. எப்படி என்றால், நாம் இக்காலத்திலும் நம் சபையில் ஆசரித்து வருகிற திருவிருந்து ஆராதனை முறைமையின் அர்த்தங்களை தழுவி கர்த்தருடைய பந்தியாம் நற்கருணையின் சிறப்புகளை ஓங்க கூறி, நம்மை எப்படி அந்த பந்திக்கு தயார் படுத்தவேண்டும்…
₹200.00Original price was: ₹200.00.₹0.00Current price is: ₹0.00.
Rated 0 out of 5
நாசரேத் மிஷன் சரித்திரம் புத்தகத்தை எழுதியவர் திருநெல்வேலி திருமண்டல முன்னாள் குருத்துவ செயலர் மற்றும் செராம்பூர் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான அருள்திரு. D.A.கிறிஸ்துதாஸ் அவர்கள். இவர் பல வரலாற்று புத்தகங்களை எழுதியுள்ளார்.
₹350.00Original price was: ₹350.00.₹0.00Current price is: ₹0.00.
Rated 0 out of 5
பூமி சாஸ்திரம் என்பது 1832 ஆம் ஆண்டு கனம் இரேனியசு ஐயரால் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூல் ஆகும். தமிழில் புவியியல் துறையில் வெளிவந்த முதல் நூல்களில் இதுவும் ஒன்று. இந்த நூலில் சமக்கிருதக் கலைச்சொற்கள் பரவலாக எடுத்தாளப்பட்டுள்ளன. புவியின் மக்கள் வாழும் ஒவ்வொரு கண்டத்தின் புவியியல், நாடுகள், காலநிலை, மக்கள், உயிரின விபரங்கள் இந்த நூலில் குழந்தைகள் புரிந்து கொள்ளக்கூடிய தமிழில் எழுதப்பட்டுள்ளது. பின்னாளில் பரந்த பயன்பட்டுக்கு வந்த பல கலைச்சொற்கள் எடுத்தாளப்பட்டுள்ளன